கார் மோதி ஒருவர் பலி
Tuesday, 05 January 2010 21:01
வெள்ளரிபட்டியை சேர்ந்தவர் ஆண்டி மகன் சர்க்கரை(38). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை வெள்ளரிபட்டி நான்கு வழிச் சாலை ரோட்டை கடக்க முயன்றார். அப்போது மதுரையை நோக்கி சென்ற சுமோ இவர் மீது மோதியது. படுகாயத்துடன் மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நேற்று இறந்தார். மேலூர் போலீசார், கார் டிரைவர் மகாலிங்கத்தை கைது செய்தனர்