பைக்கில் சென்றவர் பஸ் மோதி பலி
Saturday, 23 January 2010 23:35
தனியாமங்கலத்தை சேர்ந்தவர் மணவாளன் (39). நேற்று காலை 11 மணிக்கு மேலூரை நோக்கி ஹோண்டா பைக்கில் சென்றார் (ஹெல்மெட் அணியவில்லை). மதுரையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பஸ், நாவினிப்பட்டி வளைவில் மணவாளன் மீது மோதியது. இதில் அவர் பலியானார். மேலூர் போலீசார் ராமநாதபுரத்தை சேர்ந்த பஸ் டிரைவர் முனியாண்டியை(35) கைது செய்தனர்.