Welcome To மேலூர்Net.Com

Home Melur-News கழிவு நீர் ஓடும்பெரியாற்று கால்வாய்

கழிவு நீர் ஓடும்பெரியாற்று கால்வாய்

E-mail Print
வைகை பாசனத்தின் கடை மடை பாசன பகுதியான மேலூர் பகுதியில், பெரியாற்று கால்வாய் நீருக்கு தற்போது முறை பாசனம் வைக்கப்பட்டு தண்ணீர் விடப்படுகிறது. பல இடங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் அக்கால்வாய்களில் கழிவு நீர் ஓடுவது தெளிவாக தற்போது தெரிகிறது. இக்கழிவு நீரில் துணிகளை துவைத்து சலவையகத்திற்கு பலர் அனுப்புகின்றனர். இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

கால்வாயில் வைகை அணை தண்ணீர் வரும் போது, கழிவு நீர்வெளியில் தெரிவதில்லை. ஓட்டல் கழிவுகள், மற்றும் குடியிருப்பு பகுதி கழிவுகளை அடித்து வரும் இக்கால்வாய் நீர் தான் கண்மாய்களில் தேக்கப்படுகிறது. அவற்றைவிவசாயத்திற்கும், குளிக்கவும் பயன்படுத்துகின்றனர். ஆடு மாடுகளும் அத் தண்ணீரையே குடிக்கின்றன. கிராமப் பகுதிகளில் தொற்று நோய் ஏற்படுவதற்கு இக்கழிவு நீர் கலந்த கால்வாய் நீரும் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்வாய் நீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன் வர வேண்டும்.

 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites