மேலூர் நகராட்சி கூட்டம்
Tuesday, 22 December 2009 20:55
மேலூர் நகராட்சி கூட்டம் தலைவர் தமிழரசி(தி.மு.க.,) தலைமையில் கூடியது. துணைத் தலைவர் அய்யப்பன், கமிஷனர் (பொறுப்பு) கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். வார்டுகளில் அடிப் படை வசதிகள் உட்பட பல்வேறு நலத் திட்ட பணிகள் நிறைவேற்றப்படவில்லை என அனைத்து கவுன்சிலர்களும் கூச்சலிட்டனர். "கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பணிகள் குறித்து தனி தனியாக மனுக்களாக நகராட்சி அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அவற்றிற்கு திட்ட மதிப் பீடு தயார் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்,' என துணைத் தலைவர் அய்யப்பன் கூறினார்.அரசு நிதியில் இருந்து செப்டிக் டேங்கர் லாரி வாங்குவது, குடிநீர் பிரச்னைக்காக தண்ணீர் லாரி வாங்குவது என 62 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.