மாட்டு வண்டி பந்தயம்
Friday, 15 January 2010 16:09
பொங்கலை முன்னிட்டு நேற்று காலை மேலூர் அருகில் உள்ள சுண்ணாம்பூரில் இரண்டு பிரிவுகளில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. தமிழக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் கொடி அசைத்து பந்தயத்தை துவக்கி வைத்தார். பெரிய மாடு பிரிவில் 13 ஜோடிகள் கலந்து கொண்டதில் பாண்டிகோயில் பாண்டிசாமி முதல் இடத்தையும், தேனி சுரேஷ் இரண்டாம் இடத்தையும், கொட்டாங்குளம் மலைச்சாமி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.