மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஜன. 18ம் தேதி காலையில் ஆண்களுக் கான குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இச்சிகிச்சை மூன்றே நிமிடங்களில் செய்யப்படும்.
எளிதானது, நம்பகமானது, வலி இல்லாதது, இச்சிகிச்சையால் ஆண்மை குறைவு ஏற்படாது. சிகிச்சை முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்லலாம். இச்சிகிச்சை செய்வோருக்கு அரசு ஈட்டுத் தொகையாக ரூ. 1100ம் உடன் வருவோருக்கு ரூ. 200ம் வழங்கப்படும். இது தொடர்பாக 0452- 264 1937, 94420 88090 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மருத்துவ நலப்பணிகள் துணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.


