லாரி மோதி மூதாட்டி பலி
Monday, 08 February 2010 22:00
கொட்டாம்பட்டிஒன்றியம் கம்பூரைச் சேர்ந்த இலங்கி என்பவரின் மனைவி பாப்பு(65). நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத் திற்கு வந்த அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கருங்காலக்குடி நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றபோது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி வந்த லாரி மோதி இறந்தார். திருமங்கலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் முத்துப் பாண்டியை கொட்டாம் பட்டி போலீசார் கைது செய்தனர்