பூத்தட்டு திருவிழா
Thursday, 10 December 2009 12:00
கீழவளவில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் பூத் தட்டு திருவிழா நடந்தது. கீழவளவு பகுதியை சுற்றியுள்ள சருகுவலையபட்டி, வாச்சாம்பட்டி, வடக்கு வலையபட்டி, அம்மன்கோயில்பட்டி கிராமங்களில் பூ விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. தங்கள் வயலில் விளைந்த பூக்களை வீரகாளியம்மனுக்கு காணிக்கை செலுத்தினால், மேலும் விளைச்சல் அதிகரிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கைகளில் பூத் தட்டு ஏந்தி வந்து கோயிலில் காணிக்கை செலுத்தினர்.