கோழிக்கு போஸ்ட் மார்ட்டம்
Wednesday, 20 January 2010 21:14
கோழிக்கு விஷம் வைத்ததாக புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார், அக்கோழியை போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். மதுரை மாவட்டம் மேலவளவு அருகில் உள்ள கவட்டையம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது கோழிகள் சில இறந்து போயின. கோடாங்கி என்பவரது மனைவி சித்ரா, கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டதாக மேலவளவு போலீசில் முருகேசன் புகார் செய்தார். போலீசார் கோழி மற்றும் 12 குஞ்சுகளுக்கு தும்பைப்பட்டியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் போஸ்ட் மார்ட்டம் செய்ய ஏற்பாடு செய்தனர்.