வழிப்பறி செய்தவர் கைது
Sunday, 17 January 2010 09:42
கொட்டாம்பட்டி ஒன்றியம் கருங்காலக்குடி ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் முகமது யூசுப்(31). கருங்காலக்குடியில் கறிக்கடை வைத்துள்ளார். நேற்று காலை கடைக்குச் சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த ரிவாஸ்(20) என்பவர் கத்தியைக் காட்டி, அவரிடம் பணம் கேட்டு மிரட்டினார். முகமது யூசுப் சத்தம் போடவே, அருகிலிருந்தவர்கள் ரிவாஸை கத்தியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கொட்டாம்பட்டி போலீசார் ரிவாஸை கைது செய்தனர்.